டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காஷ்மோரா படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் ‛காற்று வெளியிடை' படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ‛சதுரங்க வேட்டை' புகழ் வினோத் இயக்கத்தில் “தீரன் அதிகாரம் ஒன்று'' படத்தில் நடிக்கிறார் கார்த்தி. கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்சல்மர் பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பூஜ் பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ‛தீரன் அதிகாரம் ஒன்று' படம் விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் இப்பட ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே'' ஆக்ஷ்ன் காட்சி ஒன்றும் பூஜ் பகுதியில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் படமாக்கப்படவுள்ளது. மொத்தம், இங்கே 40 நாட்கள் படப்பிடிப்பாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்றார்.