'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் விளங்குபவர் நடிகர் குஞ்சாக்கோ போபன்.. அப்படிப்பட்டவர் ஏன் வசதி குறைந்த ரிசார்ட்டுகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார் என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.. விரிவாக படித்தால் விஷயம் தெரிந்துவிடப்போகிறது.. தற்போது ரஞ்சித் சங்கர் டைரக்சனில் 'ராமண்டே ஈடன் தோட்டம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் குஞ்சாக்கோ போபன்.. இந்தப்படம் வரும் மே-12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது..
இந்தப்படத்தில் ரிசார்ட்டுகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்பவராக நடித்துள்ளார் குஞ்சாக்கோ.. ரிசார்ட் என்றாலும் மிகக்குறைந்த வசதிகள் கொண்டவைதான்.. இவற்றை வைத்து எப்படி தொழில் போட்டியை அவர் சமாளிக்கிறார் என்பதுதான் கதை... இதேபோல சில வருடங்களுக்கு முன் வெளியான 'புள்ளிப்புலிகளும் ஆட்டின் குட்டியும்' என்கிற படத்தில் கூட இதேபோல குறைந்த வசதிகொண்ட போட் ஹவுஸ்களை வடக்கு விட்டு தொழில் நடத்துபவராக குஞ்சாக்கோ நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.