இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையின் பெண்கள் நல்லெண்ண தூதராகவும் இருக்கிறார். கடந்த மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபையில் அவருடைய பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சி குறித்து பிரபல நடனக் கலைஞர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்கள். பிரபல நடனக் கலைஞர் அனிதா ரத்னம், “பரதநாட்டியம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. இது பரதநாட்டியத்தின் கேலிசி சித்திரம்” என தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவருஐடய அந்த ஃபேஸ்புக் பதிவில் பரதம் தெரிந்த பலரும் தங்களது கருத்துக்களை ஆவேசமாகப் பகிர்ந்துள்ளார்கள்.
டிவிட்டரில், “ஐநா சபையில் பரதநாட்டியத்தின் பரிதாப நிலை” என்றும் அனிதா ரத்னம் பதிவிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா தனுஷின் நடன நிகழ்ச்சியை விமர்சித்து பல்வேறு விதமான மீம்ஸ்களும், வீடியோ பதிவுகளும் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றன.
கடந்த வாரத்தில் சமூக வலைத்தளங்களில் தனுஷ் அதிகம் விமர்சிக்கப்பட்டவராக இருந்தார். இந்த வாரத்தில் தனுஷிவின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்.
இந்தியா பெருமைப்படுகிறது - ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு
இதனிடையே ஐ.நா., சபையில் பரத நாட்டியம் ஆடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை ஐஸ்வர்யா பெற்றுள்ளார். அதுமட்டுமல்ல, ஐ.நா., சபையில் நடனமாடிய ஐஸ்வர்யா தனுஷூக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டும் தெரிவித்துள்ளார். அதில், மகளிர் தினத்துக்காக நியூயார்க்கில், ஐக்கிய நாடுகள் சபையில், ஐஸ்வர்யா நடனமாடியதற்கு வாழ்த்துகள். இந்தியா, உங்களை எண்ணி பெருமைப்படுகிறது என்றார். இதேபோல, பா.ஜ., முன்னணித் தலைவர்கள் பலரும் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.