மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கி இருக்கும் படம் மரகத நாணயம். இதில் ஆதி - நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம்எஸ்.பாஸ்கர், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை கலந்து இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‛யு' சான்று அளித்துள்ளனர்.
இதுப்பற்றி தயாரிப்பாளர் டில்லி பாபு மகிழ்ச்சி பட தெரிவித்திருப்பதாவது... ‛யு' சான்று பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்தவகையில் மரகத நாணயம் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‛யு' சான்று வழங்கி இருப்பது, எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தரமான படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். ஒரு படத்தின் தரத்தை உயர்த்துவது ‛யு' சான்று தான். அந்த ‛யு' சான்று பெற்று இருக்கும் எங்கள் மரகத நாணயம், நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை கவரும்" என்கிறார்.