டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்னணி நடிகர்கள் தங்கள் திரைப்படம் வெற்றி பெற்றால் அப்பட இயக்குனருக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கோலிவுட்டிலும் தற்போது தலைதூக்கியுள்ள இந்த சம்பர்தாயம் தெலுங்கு திரை உலகிற்கு பழக்கப்பட்ட ஒன்று. மகேஷ் பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் என பலரும் தங்கள் வெற்றிப்பட இயக்குனருக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் ராம் சரணும் இணைந்துள்ளார். தனது தந்தை சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக ராம் சரண் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தமிழில் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படம் தமிழைக்காட்டிலும் தெலுங்கில் நல்ல வசூல் செய்தது. இயக்குனர் விவி விநாயக் இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளராக தனது முதல் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய இயக்குனர் விவி விநாயகிற்கு ராம் சரண் விலையுர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றாராம். 50 நாட்களைக் கடந்து ரூ 104 கோடி வசூலை ஈட்டி ஒடிக்கொண்டிருக்கும் கைதி நம்பர் 150 படக்குழுவுடன் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ள ராம் சரண் இதற்காக நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றார். அந்த நிகழ்ச்சியில் ராம் சரண் காரை இயக்குனர் விவி விநாயக்கிற்கு பரிசளிக்க ராம் சரண் முடிவு செய்துள்ளார்.