அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தற்போது தயாரிப்பில் இருக்கும் தென்னிந்திய திரைப்படங்களில் இன்றைய தேதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இரண்டு படங்களுக்கு மட்டுமே. ஒன்று... ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படம். இரண்டு... ராஜமௌலி இயக்கும் பாகுபலி-2 படம்.
ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமானமுறையில் உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இதனால் 'பாகுபலி-2' படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் பாகுபலி -2 படத்தின் டிரைலரை இம்மாதம் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. மும்பையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் 'பாகுபலி-2' பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிடவிருக்கிறார்.
2.0 படத்தின் ஹிந்தி ரைட்ஸை பெரிய விலைக்கும் விற்க வேண்டும் என்ற திட்டத்தோடு, அப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை மும்பையில் வெளியிட்டனர். அதே வழியில்தான் தற்போது பாகுபலி-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழாவை முப்பையில் நடத்துகின்றனர். டிரைலர் வெளியீட்டை தொடர்ந்து படத்தின் பாடல்களை இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் மிக பிரம்மாண்டமான விழாவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.