ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது தயாரிப்பில் இருக்கும் தென்னிந்திய திரைப்படங்களில் இன்றைய தேதியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இரண்டு படங்களுக்கு மட்டுமே. ஒன்று... ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படம். இரண்டு... ராஜமௌலி இயக்கும் பாகுபலி-2 படம்.
ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமானமுறையில் உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இதனால் 'பாகுபலி-2' படத்துக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் பாகுபலி -2 படத்தின் டிரைலரை இம்மாதம் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. மும்பையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் 'பாகுபலி-2' பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் வெளியிடவிருக்கிறார்.
2.0 படத்தின் ஹிந்தி ரைட்ஸை பெரிய விலைக்கும் விற்க வேண்டும் என்ற திட்டத்தோடு, அப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை மும்பையில் வெளியிட்டனர். அதே வழியில்தான் தற்போது பாகுபலி-2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழாவை முப்பையில் நடத்துகின்றனர். டிரைலர் வெளியீட்டை தொடர்ந்து படத்தின் பாடல்களை இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் மிக பிரம்மாண்டமான விழாவில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.