மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
'சிவாஜி, எந்திரன்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமானது. ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சன், மற்றொரு நாயகனாக ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி என்று சொல்லி வருகிறார்கள்.
'2.0' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே ரஜினிகாந்த் நடித்த மற்றொரு படமான 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இரண்டு படங்களிலும் ரஜினிகாந்த் மாறி மாறி நடித்து வந்தார். 'கபாலி' படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்ததும் ஓய்விற்காக அமெரிக்கா சென்றார். அதனால், '2.0' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாக படத்தின் இயக்குனர் ஷங்கர் நேற்று அறிவித்துள்ளார். ஒரு முக்கியக் காட்சி படமானவுடன் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு படப்பிடிப்பு நிலவரம் பற்றி அவர் அறிவித்துள்ளார். இப்படத்தின் நாயகியான எமி ஜாக்சன் ஏற்கெனவே அவருடைய பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
'2.0' படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவர உள்ளது.