தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பாவனாவின் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு விழித்துக்கொண்டது நடிகைகள் வட்டாரம். அதுபோன்ற நிலை தொடரக்கூடாது என்பதற்காக, பல நடிகர் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒருபடி மேலே சென்று சேவ் சக்தி என்றொரு அமைப்பை தொடங்கி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்.
இதற்கு நடிகர் விஷால், மிஷ்கின், பிரசன்னா, சினேகா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவரது சேவ் சக்தி இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். அப்போது இந்த சேவ் சக்தி திரையுலக பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் அனைத்து ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் வரலட்சுமி.
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சினேகா, வரலட்சுமியை நடிகை என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்க வேண்டாம். அவர் ஒரு பெண்ணாக, அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இந்த சேவ்சக்தி அமைப்பை தொடங்கியிருக்கிறார். அவருடன் இணைந்து அனைவரும் செயல்படுவோம். குற்றங்களை தடுப்போம். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.