பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் பாக்யராஜின் மகனான சாந்தனு 2008ல் வெளிவந்த 'சக்கரக்கட்டி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த 9 வருடங்களாக வெறும் 8 படங்களில் மட்டுமே நடித்துள்ள சாந்தனு, ஒவ்வொரு படத்தையும் தனக்குத் திருப்புமுனை படமாக இருக்கும் என்று நினைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும், பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடித்து வெளிவந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் தனக்கு மிகப் பெரிய திருப்புமுனையைத் தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் படம் யாருடைய வங்கிக் கணக்கையும் நிரப்பாமல் தோல்வியடைந்தது.
பாலாவின் உதவியாளரான அதிரூபன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடித்த 'முப்பரிமாணம்' படமாவது தன்னை எப்படியாவது முன்னுக்குக் கொண்டு வந்துவிடும் என்று நம்பினார். படத்தைப் பற்றி ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் முதலுக்கு மோசம் வந்துவிடாது என்று நினைத்திருந்தார்கள். ஆனால், இன்று வெளிவந்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தாலும், நாளை வெளிவர உள்ள 'மாநகரம்' படத்தாலும் 'முப்பரிமாணம்' படம் ஓடிக் கொண்டிருந்த பல தியேட்டர்களில் படத்தை எடுத்துவிட்டார்கள்.
சாந்தனுவின் ரசிகர் ஒருவர் இது பற்றி வருத்தப்பட்டு போட்ட ஒரு டிவீட்டுக்கு சாந்தனு கோபப்பட்டு பதிலுக்கு டிவீட்டியிருக்கிறார். “இதுதான் வாழ்க்கை, சினிமாவை வாழவைப்பது மக்கள், சினிமாவை அழிப்பது சினிமாகாரன்” என தன் படத்தைத் தூக்கக் காரணமானவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் யாரைச் சொல்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.