டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாடகர், இசையமைப்பாளர், காமெடியன் என பல முகம் காட்டிக் கொண்டு, சினிமாவில் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் பிரேம்ஜிக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையின் காரணமாக மாங்கா உட்பட ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரவில்லை. எனவே, மீண்டும் காமெடியனாக நடித்தார்.
அதன்படி காமெடியனாக நடிக்க ஆரம்பித்த பிரேம்ஜிக்கு வந்த படம்தான் 'சிம்பா'. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத், புதுமுகங்கள் பானு மெஹ்ரா, ஸ்வாதி தீக்ஷித் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் 'சிம்பா' படத்தை தமிழின் முதல் STONER திரைப்படம் என்று சொல்கின்றனர். இப்படியொரு டேக் லைனுடன் வெளியாகவிருக்கும் சிம்பா படத்தில் பிரேம்ஜி, நாய் வேஷம் எல்லாம் போட்டு நடித்துள்ளாராம்.
சிம்பா படத்தின் கதைப்படி, கஞ்சா போதைக்கு அடிமையான பரத், கஞ்சா அடித்துவிட்டு ஒரு அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பவர். பிரேம்ஜியை பார்க்கும்போதெல்லாம் பரத் கண்களுக்கு பிரேம்ஜி ஒரு நாய் போன்று தோன்றுவாராம். இதனால் பிரேம்ஜி நாய் 'கெட்-அப்'பில் நடித்துள்ளார்.