நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.. அந்த வீடியோவில் பேசும் நசீ அஷ்ரப் என்கிற நபர் மோகன்லாலையும், அவரது நண்பர் மற்றும் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூரையும் மிக மோசமாக அவதூறு பேசுகிறார். குறிப்பாக மோகன்லாலும், ஆண்டனியும் சேர்ந்து விபச்சார தொழிலுக்கு பண உதவி செய்துகொண்டிருந்தார்கள் என அவர் பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கொண்டே போகிறார். இந்த விஷயம் ஆண்டனி பெரும்பாவூரின் கவனத்துக்கு வரவே, உடனே அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார் உடனே விசாரணை நடத்தியதில் அந்த இளைஞரை பிடித்து வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தனர்.. அவர் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் அந்த இளைஞனின் தாய் கூறியுள்ளார். இது குறித்து மேலும் போலீசார் விசாரித்தபோது தனக்கு ஐந்து கோடி ரூபாய் சொத்து உள்ளது என்றும், தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடமே நேரடியாக பேசி வருவதாகவும் நசீ அஷ்ரப் எல்லோரிடமும் கூறிக்கொண்டு இருப்பாராம். இந்த வழக்கை எப்படி டீல் செய்வது என போலீஸார் குழம்பி வருகிறார்களாம்.