டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், மைம்கோபி நடித்துள்ள படம் கட்டப்பாவ காணோம். ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். மணி சேயோன் இயக்கி உள்ளார். "கட்டப்பா படத்தால் தான் எனக்கு இந்தி பட வாய்ப்பு கிடைத்தது" என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் மேலும் கூறியதாவது:
சிலர் தாங்கள் வளர்க்கும் நாய் அல்லது பூனையை அதிர்ஷ்டமாக கருதலாம், இன்னும் சிலர் தாங்கள் உடுத்தும் குறிப்பிட்ட நிற ஆடையை அதிர்ஷ்டமாக கருதலாம். அந்த வகையில், எனக்கு இந்த கட்டப்பாவ காணோம் திரைப்படம் என் வாழ்க்கையில் அமைந்த மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம். ஏனென்றால், இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் எனக்கு இந்தி திரையுலகில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தி வாய்ப்பு வந்தபோது இயக்குனரிடம் சொன்னேன். நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை தள்ளி வைத்து என்னை இந்தி படத்தில் நடிக்க அனுப்பி வைத்தார். அப்படிச் செய்யாமல் எங்கள் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தால். எனது இந்தி வாய்ப்பு பறிபோயிருக்கும்.
2017 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் திரைப்படம் கட்டப்பாவ காணோம். நிச்சயமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் கவரக்கூடிய ஒரு திரைப்படமாக இருக்கும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.