'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜோதிகா ஹீரோயினாக நடிக்க சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் மகளிர் மட்டும். குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குகிறார். ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, நாசர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பிரம்மா கூறியதாவது:
80 சதவிகித பணிகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். குற்றம் கடிதல் படத்தில் குழந்தைகள் பற்றி பேசினேன். இந்தப் படத்தில் பெண்கள் பற்றி பேசுகிறேன். குற்றம் கடிதல் பார்த்து விட்டு சூர்யா சார் போன் பண்ணி வரச் சொன்னார். ஜோதிகா நடிப்பதற்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். நான் அவருக்கு 3 கதைகள் சொன்னேன். அதில் ஜோதிகா மேடம் தேர்வு செய்தது மகளிர் மட்டும் கதையை.
இந்தப் படத்தில் அவர் ஆவணப்பட இயக்குனராக நடிக்கிறார். பெண்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதை உடைக்கிற மாதிரியான கேரக்டர் ஜோதிகா மேடத்திற்கு, அதில் ஒன்றுதான் அவர் பைக் ஓட்டுவது. சரண்யா, ஊர்வசி, பானுப்பரியா என முன்னாள் ஹீரோயின்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது படம் வெளிவந்த பிறகு தெரியும். பெண்கள் தங்களின் சுதந்திரத்தை போராடியோ கெஞ்சியோ பெறத் தேவையில்லை. துணிச்சலுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே படத்தின் மைய கரு. இதை பெண்கள் கதை என்ற வட்டத்துக்குள் அடைக்க முடியாது. பெண்களை முன்னிறுத்துகிற படம் என்று சொல்லலாம். இது ஆர்ட் படம் அல்ல ஒரு கொண்டாட்டமான சினிமா. அதனால்தான் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. என்கிறார் பிரம்மா.