விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாலா இயக்கிய தாரைத்தப்பட்டை இளையராஜாவுக்கு ஆயிரமாவது படம். அந்த படத்தின் பின்னணி இசைக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதோடு அந்த படத்தில் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்திற்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார். அதோடு கமலின் சபாஷ் நாயுடு, பிரியதர்ஷனின் சில சமையங்களில் உள்பட பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வரும் இளையராஜா, களத்தூர் கிராமம் என்ற படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
மதுரைக் கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் கிஷோர் நாயகனாக நடித்திருக்கிறார். கதைப்படி அவருக்கு ஒரு மான்டேஜ் டூயட் சாங் படத்தில் உள்ளதாம். அந்த பாடலை இளையராஜா பாடினால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இளையராஜா அதற்கு மறுத்து விட்டாராம். அதனால் வேறு யாரையாவது வைத்து பாட வைக்கலாம் என்று இன்னொரு பாடகருக்கு அந்த வாய்ப்பை கொடுத்து விட்டாராம்.