தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரத், பிரேம்ஜி, பானுஸ்ரீ மெஹரா, ஸ்வேதா அசோக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிம்பா. கே.சிவநேசன் தயாரித்துள்ள இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, ஜெயம்ரவி, விஷால், மிஷ்கின், பிரசன்னா, சினேகா, உதயா உள்பட பலர் கலந்து கொண்ட னர். அப்போது இயக்குனர் மிஷ்கின் பேசுகையில்,
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறோம். இதற்கு முன்பு நான் போட்டியே போட்டதில்லை. விஷாலுக்காக இறங்கியிருக்கிறேன். வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், தோல்வியே உயர்வுக்கு கொண்டு வரும் என்று நம்புபவன் நான். நான் இயக்கியதில் பத்தில் 2 படம்தான் வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் எங்களது டீமைப்பார்த்து ஒரு மேடையில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பது இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறப்போகிறோம். தனி மனித விமர்சனம் பற்றி நிறையவே பேசினார்கள். விஷால் நல்லது மட்டுமே செய்ய நினைக்கிறார். 24 மணி நேரமும் யாராவது ஒருத்தர் வந்து ஏதாவது கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இவர் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.
இந்த தேர்தலில் போட்டியிடும் எனக்கு ஓட்டுக்களே தேவையில்லை. எல்லா ஓட்டுக்களையும் விஷாலுக்கே கொடுங்கள். விஷாலுக்கு உடம்பெல்லாம் விஷம் என்று சொல்கிறார்கள். ஒருவேளை விஷாலுக்கு சிவன் போன்று கழுத்தில் விஷம் இருக்கலாம். தனி மனித விமர்சனம் வேண்டாம். எங்களை விமர்சிக்க நாங்கள் இன்னும் பதவிக்கே வரவில்லை. இனிமேல்தான் வரப்போகிறோம். பிறகு எப்படி எங்களை விமர்சிக்க முடியும். விமர்சிப்பதற்கு முன்பே ஒரு ப்ரூப் வைத் துக்கொண்டு பேசுங்கள். நியாயமாக பேசுங்கள். தேர்தலை சந்தியுங்கள்.
விஷால் அணியினர் நடிகர் சங்கத்தேர்தலுக்கு முன்பு என்னென்ன சொன்னார்களோ அதையெல்லாம் செய்து விட்டனர். இப்போது தயாரிப்பாளர் சங்கம் மோசமான நிலையில் உள்ளது. அதனால் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் நல்லது மட்டுமே செய்வோம். இப்போது சொல்லும் விசயங்களை ஒரு வருடத்திற்குள் செய்து காட்டுவோம். அப்படி ஒரு வருடத்திற்கு சொன்னதை செய்யவில்லை என்றால் நாங்கள் வெளியே போய் விடுவோம். சொன்னதை செய்து காட்டவில்லை என்றால் எங்களை சட்டையை பிடித்துக் கேட்கலாம். வெளியே அனுப்பலாம் என்கிறார் மிஷ்கின்.
பரத் பேசும்போது... இந்த சிம்பா படம் பல தடைகளை தாண்டி வந்திருக்கிறது. இந்த படத்திற்காக 6 மாதமாக தாடி வளர்த்துக்கொண்டு காத்திருந்தேன். ஆனால் சரியான தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. வந்தவர்களெல்லாம் டீ, சமோசா சாப்பிட்டதோடு சரி போனவர்கள் திரும்பி வரவேயில்லை. அதனால் டென்சனான நான், இந்த படத்திற்காக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டாம் என்று வேறு படத்தில் நடிக்க முடிவு செய்து வளர்த்து வந்த தாடியை எடுத்து விட்டேன். அப்போதுதான் சிவநேசன் வந்தார். படத்தை நான் தயாரிக்கிறேன் என்று நம்பிக்கைக்கொடுத்தார்.
இந்த படத்தின் கதை வித்தியாசமானது. நான் கடவுள் படத்தில் கஞ்சா அடித்த படி நடித்திருந்தார் ஆர்யா. அவருக்குப்பிறகு இந்த படத்தில் நான் கஞ்சா அடித்து நடித்திருக்கிறேன். அந்த மாதிரியான கேரக்டர் என்றுதான் சொல்ல வந்தேன். அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த சிம்பா படம். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக்கொடுக்கும் என்றார்.