வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வெளிநாடுகளில் இடைவிடாத படப்பிடிப்பு, ஆஸ்கர் விருது விழா போன்ற, தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் களைப்படைந்திருந்த பிரியங்கா சோப்ரா, ரிலாக்ஸ் பெறுவதற்காக, சமீபத்தில் மும்பையில் உள்ள, தன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு, தன் உறவு குழந்தைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட அவர், அது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், 'எவ்வளவு களைப்பு, மன அழுத்தம் இருந்தாலும், பச்சிளம் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தால், ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். இதனால், எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ, அப்போதெல்லாம், மும்பைக்கு வந்து, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வேன். வேண்டுமானால், நீங்களும் முயற்சித்து பாருங்களேன்' என, குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.