டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைத்து விட்டனரே' என, கண்ணீர் வடிக்கிறார், சஞ்சிதா ஷெட்டி. சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் தலைகாட்டினாலும், இப்போது தான், அவருக்கு அதிக படங்கள், 'புக்' ஆகி வருகின்றன. தற்போது, மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா. நாளை, இவர் நடித்த எங்கிட்ட மோதாதே என்ற படம் வெளியாகிறது. ஆனால், இந்த சந்தோஷத்தை கூட, கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார், அவர். சமீபத்தில், சமூக வலைதளங்களில், வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தான், இதற்கு காரணம். 'இப்போது தான், என்னைத் தேடி வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. அதை சீர்குலைப்பது போல், இப்படி, யாரோ சதி செய்து, புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே' என, புலம்புகிறார், சஞ்சிதா.