தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், கேயார் தலைமையில் ஒரு அணியினரும், ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர டி.சிவா, கலைப்புலி சேகரன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் பனிப்போர் நடந்து வரும் இந்த நேரத்தில் விஷால் அணியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் வீடு வீடாக சென்ற ஓட்டு கேட்டதைப் போன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள். நேற்று வடபழனி, சாலிகிராமம் பகுதியில் உள்ள தயாரிப்பாளர்களை அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து விஷால் ஓட்டு கேட்டார். இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட இயக்குனர்கள், நடிகர்களும் இந்த ஓட்டு வேட்டையில் கலந்து கொண்டனர். விஷால் தனது அணிக்கு நம்ம அணி என்று பெயர் சூட்டியுள்ளார்.