ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, சென்னை, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் விஷால். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள மற்றொரு போராட்டம் நெடுவாசல்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து அந்தப்பகுதி மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில திரைப்பிரபலங்கள் நெடுவாசல் சென்று போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு இருந்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் உள்ளவர்களும் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். நடிகர் விஷாலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகிறார். இதன் அடுத்தகட்டமாக தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அவரே நேரில் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க உள்ளார்.