டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராகவா லாரன்ஸ் தனது ஒவ்வொரு படத்தின் போது அந்த சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மக்கள் நலனுக்காக பயன்படுத்துகிறார். அதன்படி, இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ஒரு கோடி கொடுத்தார். தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் சம்ளத்திலிருந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாய குடும்பத்தினர் என்னை சந்தித்தனர். அவர்களை பார்த்தும் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் கையில் 3 லட்சத்தை கொடுத்து அனுப்பினேன். ஆனால் அது நிரந்தர தீர்வல்ல.
தமிழ் நாட்டில் இதுவரை 271 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது. அவர்களுக்கு உதவும்படி நான் அரசிடம் கேட்க மாட்டேன். எனக்கு அரசியல் தெரியாது. 271 பேருக்கும் தனிப்பட்ட முறையில் என்னால் உதவ முடியாது. அதனால் அவர்களுக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறேன்.
ஒரு குடும்பத்திற்கு 3 லட்சம் வீதம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறேன். முதலாவதாக நான் ஒரு கோடி போட்டு இதனை தொடங்கியிருக்கிறேன். கல்லூரி மாணவர்கள் 15 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி 10 லட்சமும், இயக்குனர் பி.வாசு 5 லட்சமும், சிவலிங்கா தயரிப்பாளர் 5 லட்சமும், மொட்ட சிவா கெட்ட சிவா தயாரிப்பளார் 5 லட்சமும், டி.சிவா ஒரு லட்சமும் கொடுத்திருக்கிறார்கள். தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது. நானே நேரடியாக விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று நிதியை வழங்குவேன் என்றார் லாரன்ஸ்.