'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேரளாவைச் சேர்ந்த பூர்ணிதா, கல்யாணி என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமானார். அள்ளித் தந்த வானம், ரமணா, பிரதி ஞாயிறு, கத்திக் கப்பல், எஸ்எம்எஸ் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்பு குறைந்து விடவே தனது இயற்பெயரான பூர்ணிதா என்ற பெயரில் சின்னத்திரைக்கு வந்தார். பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன் சீரியலில் நடித்த அவர் ராஜ் டி.வியில் பீச் கேர்ள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு ஆண்டாள் அழகர் தொடரில் நடித்தார். இந்த தொடர்தான் அவருக்கு பரவலான புகழை கொடுத்தது.
கடந்த ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆண்டாள் அழகர் தொடர் முடிந்ததும். புதிய தொடர் எதிலும் நடிக்காமல் கணவருடன் பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
என் கணவரும் பிசி, நானும் நடிப்பில் பிசியாக இருந்தேன். இருவரும் உட்கார்ந்து பேசக்கூட நேரம் இல்லாமல் இருந்தோம். அதனால் நானே சின்ன பிரேக் எடுத்துக் கொண்டேன். நிறைய இடங்களுக்கு தேனிலவு சென்று வந்தோம். இதற்கு இடையில் நிறைய சேனல்களிடமிருந்த அழைப்பு வந்தது. எந்த முடிவும் எடுக்காமல் இருந்தேன். இப்போது கணவர் அனுமதியுடன் மீண்டும் நடிக்க வருகிறேன். சீரியல் கதையும், கேட்கிறேன். சினிமா கதையும் கேட்கிறேன். மீண்டும் உங்களை விரைவில் சந்திப்பேன். என்கிறார் கல்யாணி என்கிற பூர்ணிதா.