பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கடந்த சில தினங்களாகவே டோட்டல் கோலிவுட்டே பாடகி சுசித்ரா ஏற்படுத்திய அப்டேட் அதிர்வலையில் ஆடிப்போய்க்கிடக்கிறது. தனுஷ் தன்னை தாக்கியதாக ஆரம்பித்து பல நடிகைகளின் ஆபாச போட்டோக்களை தனது டுவிட்டரில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டுள்ளார் சுசித்ரா. அதையடுத்து தனது டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அவர் சொன்ன போதும், தொடர்ந்து ஆபாச படங்கள் வெளியாகிக்கொண்டேதான் உள்ளன.
இதனால் யாரோ மர்ம நபர்கள் இந்த வேலைகளை செய்து வருவதாக கூறப்பட்டபோதும், அவை அனைத்துமே சுசித்ரா பெயரில் உருவாக்கப்பட்ட டுவிட்டர் பக்கங்களாக இருப்பதால் அவர் மீதான சர்ச்சை அதிகரித்த வண் ணமே உள்ளது. இதையடுத்து இளவட்ட நடிகர் நடிகைகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, சீனியர் நடிகர் நடிகைகள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து நடிகை ரோகினியிடம் கருத்து கேட்டபோது, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. காரணம், நான் சுசித்ராவின் டுவிட்டரையே பார்க்கவேயில்லை, பார்க்கவும் விரும்பவில்லை ஸாரி என்று முடித்துக்கொண்டார்.