டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுசித்ரா டுவிட்டர் விவகாரத்தில் பலரும் சிக்கி சிதைந்து கொண்டிருக்க, சிலர் அதுகுறித்து கருத்து சொல்ல மறுத்தபோதும், சிலர் தைரியமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை சாந்தினியிடம் அதுகுறித்து கேட்டபோது, துளியும் தயங்காமல் தனது கருத்தினை தெரிவித்தார்.
அவர் கூறும்போது, தற்போது நான் பத்து படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டிருக்கிறேன். சதுரங்கவேட்டை-2, வணங்காமுடி, பலூன் உள்பட நான்கு படங்களில் மாறி மாறி டே நைட்டாக கால்சீட் கொடுத்து நடித்து வருகிறேன். இந்த பிசியிலும் சுசித்ரா டுவிட்டரில் பல நடிகர் நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகியிருப்பதை அறிந்ததும் உடனே அதை பார்த்தேன். இதை அவர் செய்தாரோ இல்லை வேறு நபர்கள் செய்தார்களோ. யார் செய்தாலும் கண்டிக்கத்தக்கதுதான்.
குறிப்பாக, ஒரே பீல்டில் இருப்பவர்களை அப்படி செய்வது வேதனைக்குரியது. இதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, எந்த பெண்களையும் தவறாக சித்தரிக்கக்கூடாது என்பது எனது கருத்து. இதுபோன்ற விசயங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் சாந்தினி.