'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தன்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த கார்த்தியை ஹீரோவாக வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படம் - 'காற்று வெளியிடை'. 'ஓகே கண்மணி' வெற்றிப் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் கதாநாயகியாக அதிதி நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கும், பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் காற்று வெளியிடை படத்தின் வெளியீட்டு வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. தமிழில் 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், 'இருமுகன்' படத்தை தயாரித்தவருமான ஷிபு தமீன் காற்று வெளியிடை படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்கியுள்ளார். மலையாள ஹீரோவான துல்கர் சல்மான் நித்யா 'மேனன்' நடித்த படம் என்பதால் 'ஓகே கண்மணி' படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடியது.
ஓகே கண்மணி படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் இது என்பதால் கேரளாவில் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு இந்த படத்தை கேரளாவில் சுமார் 100 தியேட்டர்களில் வெளியிடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.