'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தன்னை பலாத்காரம் செய்துவிடுவதாகவும், ஆசிட் வீசி விடுவதாகவும் டுவிட்டரில் சிலர் மிரட்டுகின்றனர் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான திரைப்பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் திரையுலகினர் இடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்று பல பிரபலங்களின் லீலைகளும் வெளியாகும் என அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை தான் வெளியிடவில்லை, தனது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று சுசித்ரா கூறினார். ஆனாலும் சுசிலீக்ஸ் என்ற பெயரில் பல டுவிட்டர் பக்கங்கள் தொடங்கப்பட்டு பல பிரபலங்களின் கசமுசா படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எப்போதும் டுவிட்டரில் ஆக்ட்டிவாக இருக்கும் பாடகி சின்மயியும் கூட இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் சின்மயி சம்பந்தப்பட்ட விஷயங்களும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கும் சின்மயி கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே டுவிட்டர் பக்கத்தில் சிலர் மிரட்டி வருவதாக கூறியுள்ளார் சின்மயி. ‛பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம், முகத்தில் ஆசிட் வீசி விடுவோம், பாட முடியாத அளவுக்கு செய்து விடுவோம் என்று சிலர் தொடர்ந்து டுவிட்டரில் மிரட்டி வருகிறார்கள். இதுபோன்று மிரட்டல் விடுபவர்களின் டுவிட்டர் கணக்குகளை உடனடியாக முடக்க வேண்டும்'' என்று சின்மயி கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக இணையதளம் ஒன்றில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டு, ஆதரவும் திரட்டி வருகிறார்.