தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சண்டைக்காட்சிகளுக்கு பிரத்யேக கவனம் செலுத்துபவர். அவரது கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் தனி கவன ஈர்ப்பை பெற்றவை. அந்த வகையில் தனது அடுத்த படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தை இயக்கி வரும் முருகதாஸ் அப்படத்தில் பீட்டர் ஹெயின், கணல் கண்ணன், கபாலி படப்புகழ் அன்பரி என மூன்று சண்டைக்கலை இயக்குனர்கள் பணியாற்றுகின்றனராம். இதில் பீட்டர் ஹெயின் 30 நாட்கள் இப்படத்தில் பணியாற்றி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். கணல் கண்ணன் இப்படத்தின் கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சிகளை இயக்கியுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் சண்டைக்காட்சிகளை அன்பரி இயக்குகின்றார். அன்பரி இயக்கத்தில் ஹாங்காங்கில் நடைபெறும் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இதனை முடித்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகின்றது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தில் மகேஷ்பாபு இன்டர்போல் போலீஸாக நடிக்க அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை தாகூர் மது தயாரிக்கின்றார். தெலுங்கு மற்றும் தமிழில் இப்படம் ஜூன் 23ல் திரையிடப்படும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.