'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பவர்ஸ்டார் என்று தனக்குதானே பட்டம் சூட்டிக்கொண்ட நடிகர், டாக்டர்.சீனிவாசன், டில்லி போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப்படம் வெளியானதே தெரியவில்லை, ஆனால் படம் 100 நாட்கள் ஓடியதாக அவரே விளம்பரப்படுத்தி, தனக்கு தானே பவர்ஸ்டார் என்று பட்டம் எல்லாம் சூட்டிக் கொண்டு சினி மார்க்கெட்டில் தன்னை நிறுத்தி கொண்டார். தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் சீனிவாசன்.
இந்நிலையில் ரூ.10 கோடி மோசடி செய்ததாக சீனிவாசன் மீது டில்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அவரை பல முறை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஒருமுறை கூட நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கைது வாரண்ட் பிறபிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டில்லி போலீசார் சென்னை வந்து, அண்ணாநகரில் வசித்து வந்த சீனிவாசனை இன்று(மார்ச் 7) கைது செய்தனர்.
சீனிவாசன் மீது ஏற்கனவே ஏகப்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அவர் 3 மாதம் சிறைவாசம் எல்லாம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.