தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுபாஷ் கபூர் இயக்கத்தில் வெளியான படங்கள் ஜாலி எல்எல்பி மற்றும் ஜாலி எல்எல்பி-2. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. முதல்பாகத்தில் அர்சத் வர்ஷியும், இரண்டாம் பாகத்தில் அக்ஷ்ய் குமாரும் ஹீரோக்களாக நடித்திருந்தனர். இயக்குநர் சுபாஷ், ஜாலி எல்எல்பி-3யையும் இயக்க உள்ளார். இதில் ஷாரூக்கான், நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை சுபாஷ் கபூர் மறுத்துள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛நான் இன்னும் ஜாலி எல்எல்பி-3க்கான கதையையே எழுதவில்லை, ஆனால் நிச்சயம் மூன்றாம் பாகத்தை இயக்குவேன். இப்படத்தில் ஷாரூக்கானை நடிக்க கேட்டு நான் அணுகவில்லை. எங்கிருந்து இதுபோன்ற செய்திகள் எல்லாம் வெளியாகிறது என்று தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளை கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.