இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை குஷ்பு நிஜங்கள் என்ற டி.வி.நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதேபோல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் இருவரும் குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாகவும், அதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நிஜங்கள், சொல்வதெல்லாம் உண்மை நிகழச்சிகள் மனித உரிமைகள், மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி வருகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதை மீறி இந்த நிகழ்ச்சிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளை காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி நடத்தும் குஷ்வு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் மோசமாக பேசுகிறார்கள்.
குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான முறையான படிப்பு படித்திருக்க வேண்டும். இருவருமே அதை படித்தவர்கள் அல்ல. கேபிள் டி.வி சட்டங்களுக்கு எதிராக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குடும்பம், கலாச்சார உறவுகளை அவமானப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளை தடை செய்து, நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வழக்கறிஞர் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.