டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாடகி சுசித்ரா பெயரில் ஏராளமான டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு அதில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. எது உண்மையான கணக்கு எது போலி கணக்கு என்று தெரியவில்லை. இவற்றை யார் வெளியிடுகிறார்கள் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று சுசித்ரா பெயரில் செயல்படும் டுவிட்டர் கணக்கு ஒன்றில் நடிகை த்ரிஷாவின் அந்தரங்கள் படங்கள் சில வெளியானது. இது த்ரிஷாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கர்மா என்ற தலைப்பில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை இல்லை. அமைதியாக காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர் தனக்குதானே தண்டனை கொடுத்துக் கொள்வார். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு அளிப்பார். என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து சுசித்ரா டுவிட்டரால் பாதிக்கப்பட்டுள்ள அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் சேர்த்து த்ரிஷா பதிவிட்டுள்ளார்.