ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
சோதனையான நேரத்தில் கூட உலக சாதனை ஒன்றை செய்து காட்டியுள்ளார் பிரபல மலையாள பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி.. சோதனை என்னவென்பதைத்தான் கடந்த சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோமே.. இந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்த அவரது திருமணத்தை சில காரணங்களால் அவரே நிறுத்தினார்.. ஆனால் அந்த சோகம், வருத்தம் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல், கின்னஸில் இடம்பெறும் விதமாக புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் விஜயலட்சுமி..
ஆம்.. கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணை மூலம் பாடல்களை பாடி புதிய சாதனையை படைத்துள்ளார்.. இதில் மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடிய 67 பாடல்களும் மற்றும் 12 கீர்த்தனைகளும் அடங்கும்.. நிச்சயமாக இந்த சாதனை கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.. “என்னுடைய குரு, பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கனவை நனவாக்க முடிந்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” என கூறியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.