தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உயிர் போனால் மீண்டும் வராது. வாழுங்கள்; வாழ விடுங்கள் என, நடிகர் தனுசின் சகோதரி விமலகீதா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தனுஷ் தன்னை தாக்கியதாக டுவிட்டரில் பதிவிட்ட, சினிமா பாடகி சுசித்ரா, அதன்பின், தனுஷ் நடிகையருடன் குடித்து, கும்மாளமிடுவது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதனால், தனுஷ் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகமே அதிர்ந்தது.
தற்போது, சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் முடங்கினாலும், தனுஷ் தரப்பில் ஏற்பட்ட பீதி இன்னும் விலகவில்லை. இந்நிலையில், தனுஷ் அக்காவும், பிரபல பல் மருத்துவருமான, விமலகீதா, சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: சமூக வலைதளத்தில் நடக்கும் விஷயங்களால், நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.
தேனி கிராமத்தில் இருந்து வந்த நாங்கள், தனுஷ் மற்றும் செல்வராகவனின் கடின உழைப்பு மற்றும் தியாகத்தால், இந்த நிலைக்கு வந்துள்ளோம். அவர்கள் பட்ட அவமானங்கள், கொஞ்ச நஞ்சமல்ல. இன்று, டுவிட்டரில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலை வந்து விட்டது. நாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை, ஒன்றாக இருந்து போராடுவோம். மனவேதனையுடன், சமூக வலைதள பக்கத்தில் இருந்து, சில காலம் விடை பெறுகிறேன்.
இதுபோன்ற காரியங்களை செய்பவர்கள், யாராக இருந்தாலும், நிறுத்தி விடுங்கள். உயிரை விடும் நிலைக்கு சென்றால், அவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடியாது. வாழுங்கள்; வாழ விடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.