டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொல்லாதவன், படிக்காதவன் படங்களைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ள படம் வடசென்னை. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே டைட்டீலில் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கயிருந்தார் வெற்றிமாறன். ஆனால் என்ன காரணத்தினாலோ பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது. அதன்பிறகு சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்த வெற்றிமாறன், விசாரணை படத்திற்கு பிறகு அதே வடசென்னை டைட்டீலில் தனுஷை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள வடசென்னை பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா, பவன், டேனியேல் பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார். அதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கயிருந்த நேரத்தில் விசாரணை படத்தின் விருது சம்பந்தமாக வெளிநாடு சென்றார் வெற்றிமாறன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவர் சென்று விட்டதால், பவர்பாண்டி படத்தை இயக்கத் தொடங் கிய தனுஷ், விஐபி-2 படத்திலும் நடித்து வந்தார்.
இதனால் பின்னர் சென்னை திரும்பிய வெற்றி மாறன், அந்த படங்களை தனுஷ் முடிக்கிற வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போதைய நில வரப்படி அந்த இரண்டு பட வேலைகளையுமே கிட்டத்தட்ட முடித்து விட்டார் தனுஷ். அதனால் விரைவில் வடசென்னை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமாகி விட்டார் வெற்றிமாறன். அதன்காரணமாக, கடந்த சில தினங்களாக சென்னையில் லொகேசன் பார்த்து வருகிறார் வெற்றிமாறன்.