கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ரேடியோ-வீடியோ ஜாக்கியாக பிரபலமானவர் கமல். பின்னர் புகழ், வல்லவனுக்கு வல்லவன் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த அவர், நீ இன்னும் புரிஞ்சிக்கல -என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதுவும் ரேடியோ ஜாக்கியான அவர் இந்த படம் முழுக்க ஒரு டயலாக்கூட பேசாமல் நடித்திருக்கிறார். அந்த அனுபவம்குறித்து ஆர்.ஜே.கமல் கூறுகையில்,
நீ இன்னும் புரிஞ்சிக்கல படத்தை சதீஷ்வரன் இயக்கியுள்ளார். குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் தயாராகியிருக்கிறது. என்னுடன் இணைந்து ஐஸ்வர்யா, ஸ்வேதா, மயில்சாமி, டவுட் செந்தில், திண்டுக்கல் சரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ராஜீவன் இசை யமைத்துள்ளார். நா.முத்துக்குமார், நந்தலாலா பாடல்கள் எழுதியுள்ளனர். ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும், எனக்கு முழுநேர தொழிலே பேசுவதுதான். ரெடியோ மிர்சி எப்எம் ஆர்ஜேவான நான் பேசுவதையே தொழிலாக கொண்டவன். ஆனால் எனக்கு சினிமாவில் ஒருவார்த்தைகூட பேசாமல் நடிக்க வேண்டிய வேடம் கிடைத்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்த படத்தின் ஹைலைட்டே அதுதான். அதேசமயம், நான் ஒரு வயலினை வாசித்தபடி பதில் கொடுப்பேன். யார் என்ன கேட்டாலும் வயலினை வாசிப்பேன். அதனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு மாதம் வயலின் வாசிக்க பயிற்சி எடுத்தேன். சிப்பிக்குள் முத்து படத்தில், சிப்பி இருக் குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க -என்ற பாடல் பாணியில் இந்த படத்திலும் ஒரு பாடல் உள்ளது. அதில் ஹீரோயினி கேள்வி கேட்க நான் வயலினை இசைத்து பதில் கொடுப்பேன். குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்ட கதைகள் சமீபகாலமாக குறைந்து வரும் நிலையில், அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து கண்டுகளிக்கும் நல்லதொரு படமாக இந்த படம் தயாராகியிருக்கிறது என்கிறார் கமல்.