ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அதிமுக., கட்சி இரண்டு, மூன்றாக பிளவுப்பட்டு கிடக்கிறது. அதிமுக.,வில் நட்சத்திர பேச்சாளராக இருந்த ஆனந்த்ராஜ், சசிகலாவை தலைவராக ஏற்கமாட்டேன் என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார். தொடர்ந்து சசிகலாவை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ஆனந்த்ராஜ்.
அப்போது அவர் பேசுகையில், ‛‛ஒரு குடும்பத்தின் கைக்கு கட்சியும், ஆட்சி சென்று விடக்கூடாது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். அதிமுக., பிளவுபட்டு விடாமல் தொண்டர்கள் பார்த்து கொள்ள வேண்டும். உடனடியாக கட்சியில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்'' என்றார்.