ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ராஜமௌலி இயக்கி வரும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பாகுபலி-2 படத்தின் VFX பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இதற்கிடையில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாகுபலி-2 படத்திற்கு பின்னணி பேசியுள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளிவந்தன. ராணாவின் காஸி, மஞ்சு மனோஜின் குண்டூருடு போன்ற படங்களின் அறிமுக காட்சிகளுக்கு குரல் கொடுத்த சிரஞ்சீவி பாகுபலி-2 படத்திற்கும் பின்னணி பேசுவதாகக் கூறப்பட்டது. இதனை இயக்குனர் ராஜமௌலி மறுத்துள்ளார். சிரஞ்சீவி பாகுபலி-2 படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னணி பேசுவதாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பாகுபலி-2 படத்தின் டீசர் விரைவில் திரைக்கு வரவுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.