விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுடின் குயினாக கோலொச்சி வரும் நடிகை கங்கனா ரனாவத், பாகுபலி நாயகன் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய ஏகே நிரஞ்சன் எனும் படத்தில் கங்கனா பிரபாஸிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனாவிடம் பிரபாஸ் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த கங்கனா, அடிக்கடி சண்டைகள் வந்ததால் நாங்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டோம். பிரபாஸின் பாகுபலி படம் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். பிரபாஸின் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கின்றது என கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பேட்டி வெளிவந்ததும், பிரபாஸிற்கும் கங்கனாவிற்கும் அப்படி என்ன சண்டை என சமூக வலைதளங்களில் விவாதங்கள் துவங்கியுள்ளன. மேலும் இயக்குனராகும் ஆசையையும் கங்கனா வெளிப்படுத்தியுள்ளார். ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க கங்கனா திட்டமிட்டுள்ளாராம். அதோடு ராணி லக்ஷ்மி பாய் வேடமேற்று நடிக்கவும் கங்கனா ஆவல் கொண்டுள்ளார்.