இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அவர் மரணம் இயற்கையானது அல்ல என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் அதிகம். அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவருகிறார் கலாபவன் மணியின் தம்பியான ராமகிருஷ்ணன். ஒருகட்டத்தில் போலீஸார் கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், மீறி அவர்களை வற்புறுத்தினால் தங்களையே மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்தவும் செய்தார்..
இன்னும் குற்றவாளிகளை நெருங்காத நிலையில் போலீசார் இந்த வழக்கை கைவிடப்போவதாக அறிந்த ராமகிருஷ்ணன், வழக்கை தீவிரப்படுத்தும் முயற்சியாக தற்போது குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என்பதுதான் அவரது இந்த போராட்டத்தின் நோக்கம். கலாபவன் மணிக்காக அவரது நண்பரான டாவின்சி சுரேஷ் என்பவர் செய்துள்ள அவரது உருவச்சிலை முன்பாக அமர்ந்து, மூன்றாவது நாளாக இந்த உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்.. இந்த உண்ணாவிரதத்தில் கலாபவன் மணியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டாலும் மணியின் மனைவி இதில் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது..