ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் இதே தேதியில் தான் மலையாள நடிகர் கலாபவன் மணி காலமானார்.. மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலுமே அவருக்கு திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் மிகக்குறைந்த வயதிலேயே அவர் மரணத்தை தழுவியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.. அதுமட்டுமல்ல, அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியான பின்னும் இன்னும் அதற்கு பின்னணியில் உள்ள குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலேயே இருப்பது வினோதம் தான்..
இந்தநிலையில் இன்று கலாபவன் மணியின் முதலாமாண்டு நினைவஞ்சலியில் அவருக்கு மரியாதை செலுத்த விரும்பிய கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் இருந்து கலாபவன் மணியின் சொந்த ஊரான சாலக்குடிக்கு வருகை தந்தார்.. அங்கே சாலக்குடி ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவுநாள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், கலாபவன் மணியின் பெருமைகளை நினைவுகூர்ந்து பேசினார்.. கலாபவன் மணியின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.