ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கையும் தாண்டி பாலிவுட்டிலும் நடிகை இலியானா பிரபலம். ஒருகாலத்தில் தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக இருந்த இலியானா, பாலிவுட் வாய்ப்பிற்கு பிறகு பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். தற்போது அவர் அஜய் தேவ்கன் உடன் பாத்சாகோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தன் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டார் இலியானா.
இதுப்பற்றி இலியானா கூறுகையில், ‛பாத்சாகோ' படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இப்படத்தின் ஷூட்டிங்கை நான் முடித்துவிட்டேன் என்று நம்பவே முடியவில்லை. ரசிகர்கள் எப்போதும் என் இதயத்தில் குடி கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
பாத்சாகோ படத்தை மிலன் லூதிரா இயக்குகிறார். அஜய், இலியானாவுடன் இம்ரான் ஹாஸ்மியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். இப்படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.