வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
ஆர்யா என்றாலே ஜாலியான நடிகர். முன்ன பின்ன அறிமுகமில்லாத நடிகை களைக்கண்டாலும் ஒரு நிமிடம் நிறுத்தி பேசி, அவர்களை கலாய்த்து விடுவார். அப்படியே நட்பை வளர்த்து அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து சென்று தனது அம்மா கையாலே பிரியாணி விருந்து கொடுப்பார். அந்த அளவுக்கு பழகிய சில நாட்களிலேயே பேமிலி பிரண்டாகி விடுவார் ஆர்யா. ஆனால், கடம்ப னுக்குப் பிறகு ஆர்யாவின் நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஸ்பாட்டில் பல நடிகைகள் அமர்ந்திருந்தாலும் அவர்களிடம் பேசுவதை குறைத்து, அடுத்து தான் நடிக்க வேண்டியதில் கவனத்தை திருப்புகிறாராம்.
குறிப்பாக, தற்போது அமீரின் சந்தனத்தேவனில் நடித்து வரும் ஆர்யாவுடன் அந்த படத்தில் பட்டதாரி அதிதிமேனன், கிருத்திகா போன்ற இளவட்ட நடிகைகளும் நடிக்கிறார்கள். இவர்களுடன் 4 நாட்களாக ஒரு பாடல் காட்சியில் நடித்த ஆர்யா, ஸ்பாட்டில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்திருந்தபோதும் ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக்கொண்டாராம். முக்கியமாக, கேலி, கிண்டல் என நடிகைகளை கலாய்ப்பதையே முக்கிய வேலையாக கொள்ளும் ஆர்யா, ரொம்ப நல்ல பிள்ளையாக நடந்து கொண்டாராம். இதனால், மற்ற நடிகைகள் சொன்னதை வைத்துக்கொண்டு, ஆர்யா நம்மளையும் கலாய்த்து விடுவாரோ என்று உள்ளூர பயந்து கொண்டிருந்த மேற்படி நடிகைகள், அவரது இந்த மாற்றத்தைக்கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்களாம்.