டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபமெடுத்தபோது, மாநில ஆளுங்கட்சிக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதையடுத்து மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு தமிழக சட்டசபையில் புதிய அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது தமிழ் திரையுலகில் இருந்து அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஜி.வி.பிரகாசும் ஒருவர். முன்னதாக, தனது டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அவர், கொம்பு வச்ச சிங்கமடா -என்ற பெயரில் ஒரு ஜல்லிக்கட்டு ஆல்பமும் வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் அவர். கடந்த ஞாயிறன்று நெடுவாசல் போராட்டக்களத்துக்கு சென்றிருந்த ஜி.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று, தமிழக அரசு இந்த ஹைட்ரோ கார் பன் திட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றும் வரை போராட்டத்தை நிறுத் தக்கூடாது என்று பேசியுள்ளார். அதோடு, அன்றைய தினத்தில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஒரு ஆல்பத்தை வெளியிட திட்டமிட்டிருந்த அவர், அதற்கான இசைப் பணிகள் முழுமை அடையாததால் அடுத்த முறை அங்கு செல்லும்போது அந்த ஆல்பத்தை வெளியிடுகிறாராம்.