பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சனா படம் வெளியானது. அந்தப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா என மூன்று, நான்கு படங்களுக்கு பூஜை போட்டார் ராகவா லாரன்ஸ். இவற்றில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் தவிர மற்ற படங்கள் எல்லாமே ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டன.
நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் இசை வெளியீடு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது.அதன் பிறகு, பிப்ரவரி 17ஆம் தேதி படத்தின் ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவித்தனர்.மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் இருந்ததால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. பல தடவை குறிப்பாக பிப்ரவரி மாதத்திலேயே பல தேதிகள் சொல்லப்பட்டும் படம் வெளிவரவில்லை. இந்தப் படத்தினால் சிவலிங்கா உட்பட வேறு படங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், படத்தின் பைனான்சியர் போத்ரா இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் நீதிபதி ஒருவரின் மகன் சினிமாவில் பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் உண்மை. அதற்காக மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தயாரித்தவர்கள் அவர் மூலம் ஐகோர்ட் நீதிபதியை அணுகி படத்தை வெளியிட தீர்ப்பு வாங்கிவிட்டதாக கூறப்படுவது தவறு. கோர்ட் தவறு செய்யாது. கடவுளை போல் கோர்ட்டை நம்புகிறோம். படத்தை வெளியிடலாம் என சிலர் சொல்கின்றனர். இதற்காக கோர்ட் தீர்ப்பு வழங்கி விட்டதாகவும் கூறுகின்றனர். இது தவறு. அவர்கள் விநியோகஸ்தர்களையும், தியேட்டர் அதிபர்களையும் ஏமாற்ற முயற்சி செய்கின்றனர். படம் தொடர்பான வழக்கில் இதுவரை எந்த தீர்ப்பும் வரவில்லை. தீர்ப்பை பார்த்ததாக சிலர் சொல்கின்றனர். இது தவறு. வேந்தர் மூவிஸ் மதன், மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு அதிக பணம் செலவழித்துள்ளார். ஆனால், எனக்கு 11 கோடி ரூபாய் பணம் தர வேண்டும். ஆனால் வழக்கு பல மாதம் நடக்கிறது. வழக்க உடைக்கப்பட்டு விட்டது. 10ம் தேதி படம் வெளியிட போவதாக கூறுகின்றனர். டிவியிலும் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் தவறான தகவல் பரப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதனால் படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.