ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகர் கலாபவன் மணி காலமாகி இன்றுடன் கிட்டத்தட்ட ஒரு வருடம் முடியப்போகிறது. ஆனால் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏற்பட்ட அவரது மரணம் குறித்த மர்மம் மட்டும் இன்னும் விலகாமலேயே இருக்கிறது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் கேரளா போலீசார் இந்த வழக்கை கைவிடும் எண்ணத்தில் இருக்கின்றனர்.. ஒருவேளை சிபிசிஐடிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டாலும் படலாம் என தெரிகிறது. இது ஒருபக்கம் இருக்க, கலாபவன் மணி இறந்த சில வாரங்கள் கழித்து அவருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக அவரது சொந்த ஊரான சாலக்குடியில் அவரது பெயரிலேயே மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டுவதாக அறிவித்தார் ஜனப்ரிய நாயகன் திலீப்.. அந்த திட்டம் அறிவிப்புடன் அப்படியே நிற்கிறது..ஆனால் கலாபவன் மணியின் நண்பரும் சிற்பியுமான டாவின்சி சுரேஷ் என்பவர் கலாபவன் மணியின் நினைவுச்சிலையை தனது சொந்த செலவில் உருவாக்கியுள்ளார்.. கலாபவன் மணி இறந்தபினர் அவரது சகோதரர் ராமகிருஷ்ணன், சிற்பி டாவின்சி சுரேஷிடம் வந்து அண்ணனுக்கு சிலை செய்வது குறித்து பேசினாராம். அப்போது தனக்கும் அந்த எண்ணம் ஏற்கனவே இருப்பதால், நானே எனது சொந்த செலவில் செய்கிறேன் என பணியை ஆரம்பித்தவர் இதோ இப்போது சிலையையும் செய்து முடித்துவிட்டார். சாலக்குடியில் கலாபவன் மணியின் வீட்டின் அருக்கில் உள்ள நூலகத்தில் இந்த சிலை விரைவில் நிறுவப்பட உளதாக தெரிகிறது..