'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சஞ்சய் தத், தற்போது அடுத்த படமான பூமி படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை டைரக்டர் ஓமங் குமார் இயக்க உள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தத், தனது மகள் நடிகையாகும் கனவில் இருப்பதாகவும், ஆனால் தான் அவளை தடயவியல் நிபுணராக ஆக்கி விரும்புவதாகவும் கூறினார். பேட்டியில் அவர் கூறுகையில், என் மகளை நல்ல கல்லூரியில் சேர்ப்பதற்காக நிறைய நேரத்தையும், ஆற்றலும் செலவிடுகிறேன். அது அவளுக்கு நன்றாக தெரியும். அவளை தடயவியல் நிபுணராக்க வேண்டும் என நினைத்துள்ளேன். அதில் தான் அவள் நிறைய சாதிக்க முடியும் என நிறைக்கிறேன் என்றார்.