ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபல நடிகை சோனு வாலியா. தமிழ் ரசிகர்களுக்கும் இவர் பிரபலம் தான். ஆனால் பெயரை சொன்னால் தெரியாது. ரஜினி நடித்த தளபதி படத்தில் ‛‛அடி ராக்கம்மா கைய தட்டு...'' என்ற பாடலுக்கு நடனம் ஆடியவர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வந்த சோனு, கடந்த 2008 ம் ஆண்டு வெளியான ஜெய் மா ஷிராவாலி என்ற படத்தில் நடித்தவர், இந்த படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் சோனு. முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான சோனு வாலியா, தனக்கு மர்ம நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர் ஒருவர் சோனு வாலியாவுக்கு போனில் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். அவர் சோனு வாலியாவுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியதுடன், ஆபாசமாகவும் பேசி தொல்லை கொடுத்துள்ளார். சோனு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.