பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா அவருடைய டுவிட்டர் வலை தளத்தில் கடந்த பத்து நாட்களாக வெளியிட்டு வந்த கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் நேற்றிரவு முதல் அந்தக் கணக்கில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு விஷயமும் திரையுலகத்தை அதிரச் செய்யும் விஷயங்களாக இருந்தன.
இதனிடையே, திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் சுசித்ராவைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. சுசித்ரா பகிர்ந்த பல கருத்துக்களில் தனுஷ், அனிருத், செல்வராகவன், ஆன்ட்ரியா, த்ரிஷா, டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, ஹன்சிகா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் பற்றிய பல தகவல்கள் இருந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய டுவிட்டர் கணக்கை யாரோ நீக்கியதாகவும் டுவிட்டரில் வெளியான செய்திகள் அனைத்தும் தான் வெளியிடவில்லை என்றும் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாடகி சுசித்ரா புகார் கொடுத்து இருக்கிறார். ‛ஹேக் செய்யப்பட்டு இருந்த தனது டுவிட்டர் பக்கத்தை முற்றிலுமாக முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார் . திரைப்பட பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களளை என் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் தனுஷை பழி வாங்க ஒரு நாளும் நான் நினைத்தது இல்லை என்று கூறியிருந்தார்.