டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பட்டதாரி படத்தை அடுத்து நாங்களெல்லாம் வேலைக்கு போயிட்டா ஊரை யாரு பாத்துக்கிறது படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருந்தார் அபிசரவணன். அந்த நேரம் பார்த்து ஜல்லிக்கிட்டு போராட்டம் வெடித்ததை அடுத்து, படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு போராட்டத்தில் குதித்தார். அந்த போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் கலந்து கொண்டு வருகிறார்.
இதுபற்றி அபிசரவணன் கூறும்போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உலகத்தமிழர்கள் அனைவருமே ஒரே மனநிலையுடன் போராடினர். அதற்கு நல் ல விழிப்புணர்வு இருந்தது. ஆனால் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் நடக்கும் போராட்டம் ஜல்லிக்கட்டு மாதிரி இல்லை. நான்கு நாளைக்கு முன்பு இரவு 2 மணிக்கு நெடுவாசலுக்கு மதுரையில் இருந்து 8 பேர் சென்றோம். அப்போது போராட்டக்களத்தில் யாருமே இல்லை. பகலில் மட்டுமே அங்கு போராட்டம் நடப்பது அப்போதுதான் தெரியவந்தது. அப்போது
போலீஸ் வந்து ஐடி கார்டெல்லாம் கேட்டார்கள்.
மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தலைவர்கள் யாருமே இல்லை. ஜெயிச்சிட்டோம். இப்போது தனித்தனிக்குழுக்களாக உள்ளனர். ஒன்றுமை என்பது இல்லை. புதுக்கோட்டைக்கு நாங்கள் சென்றபோது நெடுவாசலுக்கு ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள கிராமங்களுக்கே அந்த ஊரைப் பற்றி தெரியவில்லை. அந்த மக்களுக்கு எதுவுமே தெரியல. விழிப்புணர்வு என்பதே இல்லை. முக்கியமாக, அவர்களுக்கு சரியான தகவல் தெரிவிக்கப்படல. அப்டேசன் இல்லை. ஜல்லிக்கட்டு மாதிரி ஒற்றுமை இருந்தால் மட்டுமே இந்த மக்களோட போராட்டம் வெற்றி பெறும். இன்னும் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்கப்படுது. அதை மக்கள் அவாய்டு பண்ணனும். தண்ணி வேணும்னு கேரளா, கர்நாடகா, ஆந்திராக்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கோம். ஆனா இங்க இருக்கிற தண்ணிய தூக்கிக்கொடுத்திட்டிருக்கோம்.
அதோடு, மதுரையில் ஜல்லிக்கட்டு வெற்றிக்கொண்டாட்டத்துக்கு அழைத்த னர். நாங்கள் செல்லவில்லை. காரணம் தமிழர்கள் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை. திரைத்துறை, மாணவர்கள், பொதுமக்கள் என்றில்லாமல் தமிழராக அனைவரும் யோசித்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாட்டுக்கு நல் லது நடக்கனும். நாம யாருக்கும் தனிப்பட்ட ஆதரவு என்பது இல்லை. பெப்சி, கோக்க தடை பண்ணனும்னு சொல்லும்போது திரும்பவும் வாங்கி குடிக்கிறாங்களே. பார்க்க சங்கடமாக உள்ளது. சக தமிழனை நாம என்ன சொல்ல முடியும். அவர்களாக உணர வேண்டும் என்கிறார் அபி சரவணன்.