வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
பாலிவுட்டின் ‛பிக் பி'- ஆன அமிதாப் பச்சன், டுவிட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரை தற்போது வரை சுமார் 2.5 கோடி பேர் பாலோ செய்கிறார்கள். தற்போது ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‛சர்கார்-3' படத்தில் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். சர்கார் படத்தின் டிரைலவர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமிதாப்பிடம், சமூக வலைதளங்களில் நடிகர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக பகிர முடிகிறதா.? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அமிதாப், ‛கருத்து தெரிவிக்க முடியுமா..?, முடியாதா...? என்று தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்கள் என்று வந்துவிட்டால், அவதூறுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்'' என்று கூறியுள்ளார்.